இலங்கையில் விரைவில் ஏற்படப்போகும் பேராபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Hambantota
Earthquake
Kandy
Badulla
SriLanka
By Chanakyan
இலங்கையில் மிக விரைவில் நிலகடுக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பதாக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் அத்துல சேனாரத்ன அன்டஜ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக பதுளை, கண்டி, மடுல்சீமை, லுணுகம்வெஹர மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுக்கமைய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதன்படி மேல் மாகாணத்தில் நிலநடுக்கம் உணரும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.