அகதிகளை வரவேற்கும் இலக்கை கனடா எட்டவில்லை! வெளியான புள்ளிவிபரங்கள்
2021ஆம் ஆண்டுக்கான அகதிகளை வரவேற்கும் இலக்கை கனடா எட்டவில்லை என குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 81,000 அகதிகளை வரவேற்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால், ஒக்டோபர் 31ஆம் திகதி வரை அகதிகள் உள்வாங்கல் இலக்கில் குறித்த எண்ணிக்கை பாதியிலேயே இருந்தது என்பதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அதன்படி ஒக்டோபர் 31ஆம், 7,800க்கும் மேற்பட்ட அகதிகளை கனடா வரவேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இது மத்திய அரசாங்கத்தின் இலக்கான 12,500க்கும் குறைவானதாகும். கனடா வெறும் 4,500 தனியார் நிதியாதரவினால் வழங்கப்பட்ட அகதிகளை ஏற்றுக்கொண்டது.
இவ்வாறு இருந்தபோதும் தனியார் நிதியாதரவு (ஸ்பான்சர்) செய்யப்பட்ட அகதிகளுக்கான உட்கொள்ளும் இலக்கு 22,500ஆக இருந்தது.
கனடாவில் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமையில் 32,000க்கும் மேற்பட்ட அகதிகள் பாதுகாக்கப்பட்டவர்களாக (நாட்டிற்குள் நுழைந்த பிறகு புகலிடம் கோருபவர்கள்) தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் இது அதன் இலக்கான 45,000க்குக் கீழே இருந்ததாக குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 81,000 அகதிகளை வரவேற்க கனடா திட்டமிட்டிருந்தது.
ஆனால், ஒக்டோபர் 31ஆம் திகதி வரை அகதிகள் உள்வாங்கல் இலக்கு பாதியிலேயே இருந்தது என்பதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஒக்டோபர் 31ஆம் திகதியின்படி, 7,800க்கும் மேற்பட்ட அரசாங்க உதவி அகதிகளை கனடா வரவேற்றுள்ளது.
இது மத்திய அரசாங்கத்தின் இலக்கான 12,500க்கும் குறைவானதாகும். கனடா வெறும் 4,500 தனியாரால் வழங்கப்பட்ட அகதிகளை ஏற்றுக்கொண்டது. தனியார் நிதியாதரவு (ஸ்பான்சர்) செய்யப்பட்ட அகதிகளுக்கான உட்ளெடுக்கும் இலக்கு 22,500ஆக இருந்தது.
கனடாவில் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைக்கு 32,000க்கும் மேற்பட்ட அகதிகள் பாதுகாக்கப்பட்டவர்களாக (நாட்டிற்குள் நுழைந்த பிறகு புகலிடம் கோருபவர்கள்) தகுதி பெற்றுள்ளனர். இது அதன் இலக்கான 45,000க்குக் கீழே இருந்துள்ளது.