வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைப்பு

Sri Lanka Police Vavuniya Sri Lanka
By Shalini Balachandran Nov 07, 2024 12:10 AM GMT
Report

வவுனியாவில் (Vavuniya) தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் மூன்று வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, வாகனங்களின் சாரதிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு

தேர்தல் விதிமுறை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வேட்பாளரின் உருவப்படம் மற்றும் ஸ்டிக்கர் பொறித்த வாகனங்களில் வேட்பாளர்கள் பயணிக்க முடியும்.

வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைப்பு | Candidates Arrested For Violating Election Rules

இருப்பினும், வேட்பாளரின்றி அவருடைய உருவப்படம் அல்லது ஸ்டிக்கர் பொறித்த வாகனங்கள் பயணிப்பதற்கு தேர்தல் திணைக்களம் தடை விதித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் நீதிபதி இளஞ்செழியனால் விடுவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் நீதிபதி இளஞ்செழியனால் விடுவிப்பு

மேலதிக விசாரணை

இந்தநிலையில், குறித்த விதிமுறையை மீறி வவுனியாவில் வேட்பாளரின்றி வேட்பாளரின் ஸ்டிக்கர்களுடன் நடமாடிய மூன்று வாகனங்களே வவுனியாப் காவல்துறையினாரால் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைப்பு | Candidates Arrested For Violating Election Rules

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ப.சத்தியலிங்கம், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரது படம் பொறித்த வாகனங்களே தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் கைதானவர்களையும் மற்றும் வாகனங்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் பெண்ணிடம் இலஞ்சம் பெற்ற சிறை அலுவலர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நீதிமன்றத்தில் பெண்ணிடம் இலஞ்சம் பெற்ற சிறை அலுவலர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                               
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025