தமிழரசுக்கட்சிக்கு எதிரான வழக்கில் அதிரடித் திருப்பம்
தமிழரசுக்கட்சிக்கு (Ilankai Tamil Arasu Kachchi) எதிராக மேன்முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீளப்பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் வைத்தியர் சிவமோகன் தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ் மேன் முறையீட்டு நீதிமன்றில் முறையிடப்பட்ட வழக்கானது இன்றையதினம் (17.06.2025) எடுத்துக்கு கொள்ளப்பட இருந்தது.
நேருக்கு நேர் கலந்துரையாடி
இந்நிலையில், வழக்குகள் நீக்கப்பட வேண்டும், தமிழரசுக்கட்சி நலன் கருதியும், மக்கள் நலன் கருதி தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran), வைத்திய கலாநிதி சிவமோகன் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று வவுனியாவில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் நடைபெற்றிருந்தது.
சமூக செயற்பாட்டாளரும், மூன்று மாவீரர்கள், இரண்டு நாட்டுப்பற்றாளரின், மூன்று முன்னாள் போராளியின் சகோதரனுமான முல்லை ஈசனின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தரப்பினரும், வைத்தியர் சிவமோகன் தரப்பினரும் தம்முடைய பிரச்சினைகளை நேருக்கு நேர் கலந்துரையாடி அதற்கமைவாக இரு தரப்பினரும் ஒத்துழைத்து மக்கள் நலன் கருதி சிவமோகனால் போடப்பட்ட வழக்கினை மீளப்பெற்றுக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
