மத்திய வங்கி கொள்ளையடிப்பு விசாரணைகளை மறுசீலனை செய்யுமாறு சஜித் கோரிக்கை
இந்நாட்டின் மத்திய வங்கி பட்டப்பகலில் கொள்ளையடித்த சிலர் இம்முறை மத்திய வங்கியை கொள்ளையடியக்க முடியாமல் போகும் போது, ஏதாவதொரு வகையில் தாம் சார்ந்த கையாட்களை நியமிக்க முயல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக,மத்திய வங்கியின் ஆளுநர் அடங்களாக மத்திய வங்கி மீது குற்றம் சுமத்தப்படுவதான போலிச் சாட்டுகளை சுமத்திப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (19) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், மத்திய வங்கியை மீண்டும் கொள்ளையடிப்பதற்கு, அந்தப் பணிக்குப் பொருத்தமான உற்ற நட்பு வட்டார கையாட்கள் கும்பலை நியமிப்பது தங்களுக்கு இலகுவானது என அவர்கள் அறிந்து வைத்திருப்பதாக தெரிவித்த சஜித், தேசிய பட்டியல் ஊடாக பாக்கியத்தால் நியமிக்கப்பட்ட சிலரும் இதற்கு துணைபோவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார வங்குரோத்து
மத்திய வங்கி கொள்ளையடிப்பு தொடர்பில் தினேஷ் குணவர்தன தெரிவித்த கருத்தை மறுசீலனை செய்யுமாறு பிரதமரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது இந்நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தடையச் செய்ய முன்நின்ற பிரதான காரணகர்த்தாக்கள் சகலரும் செம்கம்பள வரவேற்புக்கும் மேலாக மிகவும் பாதுகாப்பாக கரைசேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பொருளாதாரத்தை வக்குரோத்தாக்கிய மற்றொரு நபர் சாம்பலிலிருந்து மீண்டும் எழ முயற்சிப்பதாகவும்,இன்னும் சிலர் அவ்வாறு எழ முயற்சிப்பவர்களுக்கு ஒட்சிசன் வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
