சிக்கப்போகும் மகிந்தவின் சகோதரர் : ஆரம்பமானது விசாரணை
முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ச(chamal rajapaksa) மீது ஊழல் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக விரைவில் அவர் ஆணையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரகலய போராட்டத்தால் பொய் கூறி பெற்ற இழப்பீடு
அரகலய போராட்டத்தின் போது தனக்குச் சொந்தமில்லாத சொத்துக்கள் அழிக்கப்பட்டதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மகன் மீதும் விசாரணை
இதற்கிடையில், இலஞ்ச ஒழிப்பு ஆணையம் அவரது மகனும் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருமான சஷீந்திர ராஜபக்சவிடம் கடந்த 5 ஆம் திகதி விசாரணை நடத்தி, மற்றொரு ஊழல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்தது.
இலஞ்ச ஒழிப்பு ஆணையம் சமீபத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் தொடர்பாக கிட்டத்தட்ட இருபது முன்னாள் அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
