குடிநீர்க் கட்டண பட்டியலை வழங்குவதில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அச்சிடப்பட்ட குடிநீர்க் கட்டண பட்டியலை வழங்குவதற்குப் பதிலாக இணையத்தில் இலத்திரனியல் கட்டண பட்டியல் முறையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்காக முதலில் தெரிவு செய்யப்பட்ட 04 பிரதேசங்களில் இந்த புதிய முறையை ஆரம்பிக்கவுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலத்திரனியல் கட்டண முறைமை
"நாம் 2023 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாடிக்கையாளர்களுக்கு கட்டண பட்டியலை செலுத்தும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

சோதனை அடிப்படையில், கொழும்பு தெற்கு நகரம், கண்டி தெற்கு நகரம், திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய 4 பிராந்திய அலுவலகங்கள் தொடர்பில் இணையவழி இலத்திரனியல் கட்டண முறைமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
2024 ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கையில் இதை விரிவுபடுத்த எதிர்ப்பார்த்துள்ளோம். அதனால் எந்த பயமும் வேண்டாம். முன்பை விட வேகமாகவும் துல்லியமாகவும் இதனூடாக கட்டண பட்டியலை வழங்கலாம்.
அச்சிடப்பட்ட பட்டியல்
1939 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

இதேவேளை திறன்பேசி இல்லாத ஒருவருக்கு அச்சிடப்பட்ட குடிநீர் கட்டண பட்டியலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.