வெறிநாயால் குழந்தைக்கு நேர்ந்த துயரம்
குழந்தையை குதறிய வெறிநாய்
வாரியபொல கனத்தேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை வெறிநாய் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வெறிநாய் ஒன்று மேற்படி குழந்தையை கடித்துள்ளதுடன் அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட வீட்டு நாயையும் கடித்துள்ளது.
அந்த நாய் வெறி நாயாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அடுத்து, தடுப்பூசி போடுவதற்காக குழந்தையின் பெற்றோர் வாரியபொல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
போடப்பட்டது தடுப்பூசி
எவ்வாறாயினும், வாரியபொல வைத்தியசாலையில் வெறிநாய்க்கடி தடுப்பூசி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பெற்றோர் குழந்தையை நிக்கவெரட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று செப்டம்பர் 4, 7 மற்றும் 11 ஆம் திகதிகளில் 3 டோஸ்களைப் பெற்றுள்ளனர்.
மற்றொரு டோஸ் நிலுவையில் இருந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து, செப்டம்பர் 21 ஆம் திகதி நிக்கவெரட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
ரேபிஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, குழந்தைக்கு செப்டம்பர் 23ஆம் திகதி உயிரிழந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
