ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா நட்டஈடு வழங்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை தீர்மானிப்பதற்காக ஓமானுடன் இறுதி உடன்படிக்கைக்கு வரத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தான் ஈரானுடன் தீவிரமாக தலையிடாமல், அவர்களின் பொருளாதார அழுத்தத்தை கவனித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சரியாக நிறைவேற்றவில்லை
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) புதிய போக்குவரத்துப் பாதைகளைத் திறப்பது தொடர்பாக ஓமான் (Muscat) மற்றும் ஈரானுக்கு (Tehran) இடையிலான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் விரிவுரையாளர் ரொக்சேன் ஃபர்மான்ஃபார்மையன் (Roxane Farmanfarmaian) . சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலே தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றவில்லை என ஈரான் கருதுதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீரிணை திறக்கப்பட மாட்டாது
ஓமானுடன் எட்டப்படும் உடன்படிக்கை மூலம் புதிய கடற்பாதை தீர்மானிக்கப்படும் போதிலும், அமெரிக்கா தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நீரிணை திறக்கப்பட மாட்டாது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியுள்ளதால் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட மாட்டாது என்றும், மத்தியஸ்தர்கள் மூலமாக மட்டுமே செய்திகள் பரிமாறப்படுவதாகவும் அவர் கூறினார்.
இழப்பீடு வழங்குதல், தடைகளை நீக்குதல் மற்றும் இராஜதந்திர அச்சுறுத்தல்களை நிறுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |