11 மாத குழந்தையை வன்புணர்ந்த பெரிய தந்தை - யாழில் நடந்த கொடூரம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By pavan
யாழ்ப்பாணத்தில் பிறந்து 11 மாதங்களேயான பெண் குழந்தையை தாயின் சகோதரியின் கணவன் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.
கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் வீக்கம் காணப்பட்டமையால் , குழந்தையின் தாய் குழந்தையை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.
வைத்திய பரிசோதனை

வைத்திய பரிசோதனையின் போது , குழந்தை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் தாயின் சகோதரியின் கணவனே குழந்தையை வன்புணர்விற்கு உள்ளாக்கினார் என கண்டறியப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி