பேசும் பிஞ்சு குழந்தையின் புத்தகப்பை: செம்மணி கொடூர கொலைகளின் மறுபக்கம்

Tamils Sonnalum Kuttram chemmani mass graves jaffna
By Shalini Balachandran Jul 01, 2025 09:10 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு மனதில் பாரிய ரணத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் தான் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குழந்தையின் புத்தகப்பை.

அது துணியால் தைக்கப்பட்ட வெறும் புத்தகப்பை மட்டும் அல்ல, இரக்கமற்ற உண்மைகளை மீண்டும் ஒருமுறை இந்த உலகுக்கு நினைவூட்டுகிற வலி நிறைந்த சாட்சியம்.

ஒரு சின்ன பிஞ்சின் ஒட்டு மொத்த கனவுகள் மற்றும் ஆசைகள் என அனைத்தும் பலவந்தமாக முடக்கப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட ஒரு கொடூரத்தின் மறுபக்கம்.

தமிழர் துயர் வரலாற்றின் வலி நிறைந்த பக்கத்தில் யாழ், செம்மணி மனித புதைக்குழி என்பது எவராலும் மறக்க முடியாத ஒரு சுமை நிறைந்த பக்கம்.

நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் ஈவிரக்கமின்றி குழந்தை மற்றும் பெரியவர் என எவ்வித பேதமும் இல்லாமல் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு சீரழிக்கப்பட்டு மண்ணுக்குள் கொன்று புதைக்கப்பட்டனர்.

காலம் கடந்தாலும் புதைக்கப்பட்ட உறவின் கதறல்கள் ஆறாமல் தொடர்கின்ற நிலையில் தான் அண்மையில் இடம்பெற்ற அகழ்வில் ஒரு குழந்தையின் எலும்புக்கூடுகளுக்கு அருகில் ஆடை, சிறிய கண்ணாடி வளையல்கள், ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீலநிற புத்தகப்பை என்பன கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த புத்தகப்பையை பிடிந்திருந்த பிஞ்சு குழந்தை மீண்டும் பாடசாலை செல்லவில்லை, வீடு திரும்பி கட்டியணைக்க காத்திருந்த தன் தாய் தந்தை முகத்தை மறுபடி காணவில்லை, நண்பர்களுடன் விளையாட அந்த கால்கள் மைதானத்திற்கு திரும்ப ஓடவில்லை, கண்ட கனவுகள் மற்றும் அழகிய ஆசைகள் எல்லாம் ஒரு நொடியில் சுக்குநூறாக முடிந்து போகும் என எவ்வித சிந்தனையும் இல்லை.

சுதந்திரமாக சுற்றி திரிய வேண்டிய வயதில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அந்த குழந்தையின் அழுகுரலும் இரத்த கறையும் இன்று புத்தகப்பையுடன் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது.

நாட்டில் இனப்படுகொலை இல்லை, நீதிக்கான போர்த்தான் நடந்தது எனும் அரசிடம் சில கேள்விகள்:

01. எது நீதி, போர் என்றால் என்னவென்று இன்னும் எழுத்து கூடக் கணிக்காத பிஞ்சுக் குழந்தைகளைத் தடுத்து வைத்து கொன்று மண்ணுக்குள் புதைத்ததா ?

02. எது நீதி, கைகளை பிடித்து வளர்த்த தாய், தந்தை, அண்ணன், சகோதரி மற்றும் சகோதரனை நேருக்கு நேர் பார்த்தபடி சீரழிக்கப்பட்டு அந்தக் கண்களில் நீர் வடிய கொன்று புதைக்கப்பட்டதுவா ?

03. எது நீதி, ஒரு இனத்தையே அடியோடு அழித்து கொத்து கொத்தாக ஆணும் பெண்ணும் குழந்தைகளும் அப்பாவியாக கொல்லப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்டதா ?

தாயகம் எங்கும் பிணக்குழிகளுக்கு கீழ் கதறும் அந்த நிசப்த குரல்களை நீதி என கூறி மறைக்க முற்படுவது கொடூரத்திலும் கொடூரமாகும்.

அரசு மறைத்தாலும் மக்கள் மறக்க மாட்டார்கள், மக்கள் கடந்தாலும் இரத்த கரை படிந்த மண் மறக்காது வலிகளின் சுமைகளை, அந்த மண் பேசும் வரை உண்மையான நீதிக்கான கேள்வி என்பது எழுந்துகொண்டேதான் இருக்கும்.

ஒரு புத்தகப்பை தானே என இலகுவில் கடந்து செல்ல முடியாது காரணம், இன்றைய குழந்தைகள் சுத்திரமாக விடுதலையாக விளையாடும் பொழுது, இந்த புத்தகப்பை எங்கேயோ ஒரு அடக்குமுறை காலத்தில் ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தையின் வாழ்வின் கடைசி சின்னமாக மாறியுள்ளது.

இது நீதிக்கான போராட்டத்திற்கு புதிய அத்திவாரத்தை பலமாக இடுவதுடன் மறைக்கப்பட்ட படுகொலைகளை, உண்மைக்கான குரல்களை புழுதியில் புதைத்து யாராலும் முடித்து விட முடியாது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

அந்த குழந்தையின் புத்தகப்பை இன்று நீதிக்கான ஒரு புதிய பக்கத்தை திறந்து வைத்துள்ளதுடன் சிதைக்கப்பட்ட அந்த குழந்தையின் கனவுகளுக்கு கொடூரர்கள் பதில் சொல்ல வேண்டிய தேவையையும் கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நூற்றாண்டு கடந்தாலும் புதையாத உண்மைகளை உலகுக்கு அந்த பிஞ்சுக் குழந்தையின் புத்தகப்பை நினைவூட்டியுள்ளதுடன் மறைந்த வலி நிறைந்த வரலாற்றின் சத்தமாய்தான் இன்று ஒலித்துள்ளது.

மறைந்த குரல்களுக்கான நீதியைத் தேடி ஓடும் சாட்சியங்களில் அந்த புத்தகப்பை கடந்து விட முடியதாக ஒரு சுமையான பக்கம் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

🛑 இது கண்டுபடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அடிப்படையில் செயற்கையாக உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படம்,

பேசும் பிஞ்சு குழந்தையின் புத்தகப்பை: செம்மணி கொடூர கொலைகளின் மறுபக்கம் | Children S Skeletons Found In Semmani Mass Grave

9 வருடங்கள் ஆகியும் இடமாற்றம் இன்றி கடமையாற்றும் ஆசிரியர் - பின்னணியில் யார்

9 வருடங்கள் ஆகியும் இடமாற்றம் இன்றி கடமையாற்றும் ஆசிரியர் - பின்னணியில் யார்

தமிழர் பகுதி வைத்தியசாலையில் அம்புலன்ஸ் பற்றாக்குறை : மாணவிக்கு நேர்ந்த அசௌகரியம்

தமிழர் பகுதி வைத்தியசாலையில் அம்புலன்ஸ் பற்றாக்குறை : மாணவிக்கு நேர்ந்த அசௌகரியம்

வடக்கு இளைஞர்களின் உதைபந்தாட்ட திறமையை முடக்க சதி: வெளிச்சத்துக்கு வரும் சர்ச்சை!!

வடக்கு இளைஞர்களின் உதைபந்தாட்ட திறமையை முடக்க சதி: வெளிச்சத்துக்கு வரும் சர்ச்சை!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வெள்ளவத்தை

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
நன்றி நவிலல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, Worthing, United Kingdom

13 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Wuppertal, Germany, Toronto, Canada, Ottawa, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025