அதிர்ச்சி தரும் புலனாய்வு நடவடிக்கை! இஸ்லாமிய பெயரில் நடமாடிய கிறிஸ்தவ அதிகாரி
எண்பதுகளின் துவக்கத்திலும் இறுதிப் பகுதியிலும் கிழக்கு மாகாணத்தில் முடுக்கிவிடப்பட்ட படுகொலைகளுக்குப் பின்னால் மாபெரும் அரசியல் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைகளில் ஒன்றாகும்.
இவற்றில் சில படுகொலைகளை நேரடியாக சிறிலங்கா அரசே நடாத்தியுமிருக்கிறது என குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
பெண்களும் குழந்தைகளும் என அப்பாவித் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று அழைக்கப்படுதலின் பெயரில் கொன்றழிக்கப்பட்ட குரூர நிகழ்வாக இந்த சம்பவங்கள் கருதப்படுகின்றன.
இந்நிலையில் இவ்வாறு படுகொலைகளை அரங்கேற்றவும், அத்துமீறல்களை செயற்படுத்தவும் இராணுவம் பல சதிவேலைகளை மேற்கொண்ட வரலாறும் காணப்படுகின்றது.
அதில் ஒன்றுதான் கிறிஸ்தவ அதிகாரி ஒருவர், இஸ்லாமியராக பெயர் வைத்து இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பிரிவினைவாதத்தை தோற்றுவிக்க மேற்கொண்ட கொடூர நகர்வுகள்.
கிழக்கில் தமிழர்களும், இஸ்லாமியர்களும் செறிந்து வாழ்ந்த நிலையில் இவ்வாறு இனவாதத்தையும், தீவிர படுகொலைகளையும் மேற்கொண்ட காரணத்தின் பின்னணி என்ன?
இந்த சம்பவங்கள் இன்றளவும் அப்போது கிழக்கில் வாழ்ந்த இளைஞர்களின் மனதில் அச்சத்தை வெளிப்படுத்தும் பின்னணியில் அங்த உண்மைகளை விரிவாக ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி....
