சிஐடி விசாரணை வளையத்தில் டக்ளஸ்...! அரச தரப்பு தகவல்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அரசாங்கம் அறிவித்துள்ளது..
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில், டக்ளஸ் தேவானந்த கைது விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவாலேயே துப்பாக்கி தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது.
மேலதிக விசாரணைகள்
டக்ளஸ் தேவானந்தாவுக்கு 2000 காலப்பகுதியில் ரி- 56 துப்பாக்கிகள் 13 மற்றும் ஆறு பிஸ்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று மட்டுமே என்னால் குறிப்பிட முடியும்.
கம்பஹா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
இதேவேளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செய்த கொலைகள், கடத்தல்கள், கப்பம், ஊழல் தொடர்பிலும் அம்பலத்துக்கு வரும் என்றும் அதை நீதித்துறை செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |