வடக்கில் இராணுவத்தால் மீட்கப்பட்ட தங்கம்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Central Bank of Sri Lanka Sri Lanka Army Gold smuggling Northern Province of Sri Lanka Gold
By Independent Writer May 05, 2025 10:54 AM GMT
Report

புதிய இணைப்பு

தற்போது இராணுவ புலனாய்வு சபையின் பொறுப்பில் உள்ள தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைக்கு அனுப்பி ஆய்வு செய்து அறிக்கையை அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவுவைப் பிறப்பித்தார்.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட நீதவான், இந்த விசாரணைகளுக்குக் கோரப்பட்ட வேறு பல உத்தரவுகளையும் பிறப்பித்தார்

முதலாம் இணைப்பு

வடக்கில் உள்நாட்டு யுத்த காலத்தில் இராணுவத்தால் மீட்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக கொழும்பு தலைமை நீதிபதியிடம் சி.ஐ.டி (CID) தெரிவித்துள்ளது.

வடக்கில் இராணுவத்தால் மீட்கப்பட்ட தங்கம்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Cid Investigates Gold Recovered By The Military

கடந்த 2009 இல் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதி காலக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களுக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு இருந்தது.

இந்த நகைகள் கடந்த 16 ஆண்டுகளாக இராணுவத்தின் வசமிருந்து வந்துள்ளது.

மீட்கப்பட்ட நகைகள் 

இந்நிலையில், கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீட்கப்பட்ட நகைகள் காவல்துறையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இந்த நகைகள் அனைத்தையும் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அத்துடன் அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படும் பொருட்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

இந்நிலையில், இறுதி யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொதுமக்களின் மீட்க்கப்பட்ட தங்கத்தை அவர்களிடம் கட்டாயம் ஒப்படைப்போம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தங்கங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லாவிட்டால், அதனை ஒரு பொது நிதியத்தில் சேகரித்து அந்த பொது நிதியத்திற்கு அரசாங்கத்தினால் மேலும் நிதி போட்டு குறித்த வடக்கு பிரதேசத்தை கட்டியெழுப்புவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் வடக்கில் இராணுவத்தால் மீட்கப்பட்ட தங்கம் குறித்து விசாரணைகளை தொடங்கியுள்ளதாக கொழும்பு தலைமை நீதிபதியிடம் சி.ஐ.டி தெரிவித்துள்ளது.   


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021