அநுர அரசின் அதிரடி : ரணிலிடம் விசாரணையை ஆரம்பித்த சிஐடி
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பிலே குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தனிப்பட்ட பயணத்திற்கு அரச நிதி செலவிடப்பட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் சுட்டிக்காட்டப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சு
அதன்படி, வெளிவிவகார அமைச்சில் பணியாற்றிய 2 அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த அதிகாரிகள் தற்போது வெளிநாட்டில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வெளிவிவகார அமைச்சிற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
