இலங்கை தொடர்பில் முட்டி மோதும் - சீனா- அமெரிக்கா
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு இன்னும் இணக்கமான தீர்வை வழங்குவதற்கு செயற்படாமல் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் குற்றம் சுமத்தியுள்ளது.
நிதி உத்தரவாதத்தை வழங்குவதில் சீனா தாமதம் செய்ததாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கான சீனத் தூதரகம் மேற்படி குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.
சீனத் தூதரகம் கடும் விமர்சன அறிக்கை
Isn’t it hypocrisy at its finest for our US colleague to play the blame game instead of a self-examination? After all, why didn’t the US take decisive actions in the IMF for a more comfortable solution for Sri Lanka?
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) January 17, 2023
6/
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் பிபிசியிடம் தெரிவித்த கருத்து தொடர்பில் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் கடும் விமர்சன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கு, சீனா பிரதான தடையாக இருப்பதாக அமெரிக்க தூதுவர் பிபிசி நிகழ்ச்சிக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Media Release on the "Spoiler" hypocrisy
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) January 17, 2023
⁉️Who is the largest shareholder of the IMF with a veto power?
⁉️Who is keeping printing ??
⁉️Who owns 40% ?? external debt stock with highest interest rates?
⁉️Who sued Sri Lanka in its federal court immediately after its default?
? pic.twitter.com/mphohqxDCs