மகிழுந்து மோதியதில் காவல்துறை அதிகாரி படுகாயம்
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
கொழும்பில் போக்குவரத்தை கையாளும் காவல்துறை அதிகாரி ஒருவர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்ததானது கொழும்பு குருந்துவத்த இலவச சுற்றுவட்டத்தில் இன்று(05) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறை அதிகாரி மீது அதிவேகமாக வந்த மகிழுந்து மோதியதனால் ஏற்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவு
இந்நிலையில் அதிகாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

மகிழுந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் தொழில்நுட்ப பொறியாளராக பணிபுரியும் (28) வயதுடைய இளைஞன் எனவும் காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.