பகிரங்கப்படுத்துவோம் - இலங்கை அரசாங்கத்திற்கு தேரர் எச்சரிக்கை

Colombo Port City sriLanka SriLankaPodujanaPeramuna GotabayaRajapaksa
By Chanakyan Apr 16, 2021 11:37 AM GMT
Report

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தினால் இலங்கைக்கு எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் மற்றும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் ஆகியவற்றை நாட்டு மக்களுக்கு எதிர்வரும் வாரம் முதல் பகிரங்கப்படுத்துவோம் என தேசிய புத்திஜீவிகள் சங்கத்தின் தலைவர் நிஹால் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டை பாதுகாக்க நாட்டு மக்கள் ஒன்றினைய வேண்டும் எனவும் மியன்மார் நாட்டு நிலைமையினை அரசாங்கம் தோற்றுவிக்க கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் தொடர்பில் வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவின் காலணித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது.

அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏதும் வரப்பிரசாதங்கள் கிடைத்தால் அமைதி காத்து அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படுவார்கள். அம்பாந்தோட்டை துறைமுகத்திலும் இவ்வாறான நிலைமையே ஏற்பட்டது. ஆட்சியிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் நாட்டின் தேசிய வளங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பிற நாட்டவர்களுக்கு தாரைவார்த்துள்ளார்கள்.

தற்போதைய அரசாங்கம் ஏனைய அரசாங்கங்களை காட்டிலும் எல்லையற்ற வகையில் செயற்பட்டுள்ளது. நாட்டுக்குள் பிறிதொரு நாட்டை உருவாக்கி அதற்கான உரிமையின சட்ட மூலத்தின் ஊடாக வழங்க இரகசியமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிர்காலத்தில் ஏற்படும் பேரழிவினை நாட்டு மக்களுக்கு அடுத்த வாரம் முதல் பகிரங்கப்படுத்துவோம்.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் குறித்து நாட்டு மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்களின் போராட்டத்தை கொரோனாதாக்கத்தை காரணம் காட்டி அரசாங்கம் முடக்கும். மியன்மார் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுகிறார்கள்.

இவ்வாறான நிலைக்கு நாட்டை கொண்டு செல்லாத அளவிற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்களின் எதிர்ப்புடன் அரசாங்கத்தை அடிபணிய வைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி