பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
நாட்டில் பெரும்பாலும் 16-17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 18% பேர் மனச்சோர்வு உணர்வுகளை அனுபவித்து வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில் பிள்ளைகளிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும், 22.4% பேர் தனிமையை உணர்கிறார்கள் என்றும் மருத்துவர் சிராந்திகா விதானகே தெரிவித்தார்.
உறக்கத்தை தொலைத்த மாணவர்கள்
11.9% பிள்ளைகள் கவலை காரணமாக உறங்க முடியவில்லை என்றும், 7.5% பேருக்கு 2016 முதல் நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

பாடசாலை மாணவர்களில் சிலருக்கு தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
பெற்றோர்-குழந்தை உறவு
பெற்றோர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடக பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, பெற்றோர்-குழந்தை உறவுகள் குறைந்து வருவது இந்த துரதிஷ்டவசமான சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பெண்களில் 15.4% பிள்ளைகள் தற்கொலை எண்ணங்களைக் கொண்டுள்ளனர்.
9.6% பேர் தற்கொலைத் திட்டங்களைத் தீட்டியுள்ளதுடன், 9.1% பேர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.
தற்போது பிள்ளை டிஜிட்டல் சூழல்களில் அதிகமாக மூழ்கி விட்டதால், 2016 முதல் இந்தப் பிரச்சினைகள் நீடித்து வருவதை தரவு எடுத்துக்காட்டுகிறது.
இணைய பயன்பாடு
28.4% மாணவர்கள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இணையம் அல்லது சமூக ஊடகங்களை கையடக்க தொலைபேசி வழியாக கல்வி சாராத நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

21.9% ஆண்கள் இன்னும் கொடுமைப்படுத்தப்படுவதாகப் புகாரளித்தாலும், ஒட்டுமொத்தமாக கொடுமைப்படுத்துதல் குறைந்துள்ளதாக மருத்துவர் விதானகே கூறினார்.
கடந்த 12 மாதங்களில், வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில், பெண்களை விட 5.4% அதிகமான ஆண்கள் சைபர்புல்லிங்கை அனுபவித்துள்ளனர்.
இதற்கிடையில், கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் 5.7% பேர் புகைப்பிடிப்பவர்களாகவும், 5.3% பேர் மது அருந்துபவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் அதிகரிப்பு ஆகும்.
அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை
போதைப்பொருள் பயன்பாடும் அதிகரித்துள்ளது, மேலும் 3.2% மாணவர்கள் கஞ்சாவைப் பயன்படுத்துவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பெறப்பட்ட தரவுகளின்படி, கஞ்சா பயன்படுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 2.1 வீதமாகும்.
அதன்படி, பெற்றோர்கள் தங்கள் மாணவர்களின் நடத்தை குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்