சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்த தென் கொரிய நீதிமன்றின் தீர்ப்பு!
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் அறிவிக்க முயன்ற இராணுவ ஆட்சி முயற்சியைச் சுற்றியுள்ள கிளர்ச்சி மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சியோல் மத்திய நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமருக்கும் சிறை
இதேவேளை, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஹான் டக் சூவுக்கு, இராணுவ ஆட்சி அறிவிப்பை அமைச்சரவை கூட்டத்தின் மூலம் சட்டபூர்வமாக்க முயன்றது, ஆவணங்களைத் தவறாக பதிவு செய்தது மற்றும் சத்தியப்பிரமாணத்தின் கீழ் பொய் கூறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Image Credit: Daily Sabah
மேலும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிம் யோங் ஹியூனுக்கு, தோல்வியடைந்த இராணுவ ஆட்சி முயற்சியில் வகித்த பங்கிற்காக 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆதரவாளர்கள் எதிர்ப்பு
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து யூனின் ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Image Credit: Reuters
இதன்போது, ஆயிரக்கணக்கானோர் நீதிமன்றத்தைச் சுற்றி திரண்டு, முன்னாள் ஜனாதிபதி விடுவிக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் மேற்படி தீர்ப்பு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |