வான்ஸ் பயண குழப்பங்கள் - திருமலை அலேர்ட்டுகள்
இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கபட்ட ஈரான்- அமெரிக்க பேச்சுவார்த்தை குறித்து இரண்டுதரப்பு நிலைப்பாடுகளிலும் குழப்பம் நிலவுகிறது.
இந்த பேச்சுககளில் துணை அரசதலைவது ஜே.டி. வேன்ஸ் கலந்துகொள்வாரா என்பது குறித்தும் குழப்பங்கள் நிலவுகின்றன. பாதுகாப்புகாரணங்களால் வான்சின் இந்தப் பயணத்தை மீளெடுப்பட்டதாக ரம்ப் கூறிய பின்னர்,வெள்ளை மாளிகையோ வான்ஸ் இந்த தூதுக்குழுவுக்கு தலைமை தாங்குவதாக சொல்லியுள்ளது.
இதேபோல இந்த பேச்சுக்கள்; குறித்த அமெரிக்க நகர்வுகள் இருந்த போதிலும்; ஈரானிய தரப்பும் இந்த பதிவு பதியப்படும் வரை பேச்சுக்கு செல்வதில்லை என்ற ஒரு போக்குகாட்டலில் உள்ளது. தனது சரக்குகப்பல் ஒன்றின் இயந்திர அறைமீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி அந்த கலத்தை கைப்பற்றியமை ஈரானை கடுப்பேற்றியுள்ளது.
உலக நிலவரம் இவ்வாறு இருக்க இலங்கையின் உள்ளுர் நிலவரங்களோ இலங்கையில் இன்று மாலை தனது பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லிக்கு பறக்கும் இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனின் நிகழ்சிநிரல்களாக அதிர்ந்தன.
தமிழகத்தில் இருந்து திருகோணமலைக்கு கடலடியில் எண்ணெய் வினியோக குழாய்களை பதிப்பது அங்குள்ள இரண்டாம் உலகபோர்க்கால எண்ணெய் குதங்களை புனரமைத்து திருமலையை ஒரு சக்தி மையமாக மாற்றுவது உட்பட்ட திட்டங்கள் இந்த பயணத்துடன் அவரசரப்படுத்தப்பட்டமை தெரிந்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு….
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |