வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் குழப்பம்?
வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா(Jeevan Thiyagaraja) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். எனினும், கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வட மாகாண ஆளுநரான பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்(BSM Charles) கலந்துகொண்டிருந்தார்.
கல்கிசையில் உள்ள, வட மாகாண ஆளுநரின் கொழும்பு காரியாலயத்தில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது அவர் பதவி மாற்றம் குறித்தோ, அல்லது பதவி விலகுவது குறித்தோ எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், பதவி மாற்றம் குறித்து தமது அலுவலகத்துக்கோ, ஆளுநருக்கோ எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கப்பெறவில்லை என வட மாகாண ஆளுநரின் இணைப்பதிகாரி கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வட மாகாண ஆளுநராக தொடர்ந்தும் பீ.எஸ்.எம்.சார்ள்ஸே செயற்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற மேலும் பல தகவல்களுடன் இன்றைய தலைப்புச் செய்திகள்