வடக்கு மாகாணத்தில் ஒருவாரத்தில் 106 பேரை பலியெடுத்தது கொரோனா

corona kill northern province
By Sumithiran Sep 08, 2021 08:50 AM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4 ஆயிரத்து 83 கொவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 106 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறையின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதன்படி வடக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 515ஆக உயர்வடைந்துள்ளது. வடக்கு மாகாணத்தில் நேற்று செப்ரெம்பர் 7ஆம் திகதி 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 246 பேரும் வவுனியாவில் 160 பேரும் கிளிநொச்சியில் 99 பேரும் முல்லைத்தீவில் 39 பேரும் மன்னாரில் 31 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாகாணத்தில் நேற்றைய தினம் 22 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர். வவுனியா மாவட்டத்தில் மட்டும் 16 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் 5 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். செப்ரெம்பர் மாதத்தின் முதல் ஏழு நாள்களில் வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 83 கொவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 106 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆயிரத்து 724 தொற்றாளர்களும் வவுனியாவில் ஆயிரத்து 56 தொற்றாளர்களும் கிளிநொச்சியில் 889 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 275 தொற்றாளர்களும் மன்னாரில் 139 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் வவுனியா மாவட்டத்தில் 45 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 43 பேரும் கிளிநொச்சியில் 9 பேரும் முல்லைத்தீவில் 8 பேரும் மன்னாரில் ஒருவரும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் 2020 மார்ச் தொடக்கம் டிசெம்பர் வரை வவுனியா மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தார். எனினும் நேற்று செப்ரெம்பர் 7ஆம் திகதிவரை 515 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஓகஸ்ட் மாதத்தில் அதிகப்படியாக 228 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகப்படியாக 303 பேரும் வவுனியா மாவட்டத்தில் 119 பேரும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சியில் 45 பேரும் முல்லைத்தீவில் 28 பேரும் மன்னாரில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் நேற்றுவரை 30 ஆயிரத்து 912 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 474 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 635 பேரும் வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 788 பேரும் முல்லைத்தீவில் 2 ஆயிரத்து 192 பேரும் மன்னாரில் ஆயிரத்து 823 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024