“இந்த தடுப்பூசி 100 வீதம் பாதுகாப்பு தராது” மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர வெளியிட்ட புதிய தகவல்
srilanka
corona
virus people
By Vasanth
கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து பெற்றவர்களும் ஏனையவர்கள் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பிரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இன்றைய தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து பெற்றவர்களும் ஏனையவர்கள் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பிரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
ஏனெனில் இத்தடுப்பூசியினால் 100 வீதம் பாதுகாப்பு தராது. பாதுகாப்பற்ற சிலரும் இருக்கலாம்.
அதனால் இத்தொற்றுக்கு தடுப்பூசி பெற்றவர் வாழும் பகுதியிலும் தொற்று பரவும் நிலைமை ஏற்பட்டால் அவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தவே நேரிடும். அச்சமயத்திற்கு ஏற்ப தீர்மானம் எடுக்கப்படும்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி