“மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறது இந்த அரசாங்கம்” - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு (படங்கள்)
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் ஊழல் நிறைந்த அரசாங்கமாகவே பார்க்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள விவசாயிகளை விட வெளிநாட்டில் உள்ள விவசாயிகள் இந்த அரசாங்கத்திற்கு விசேடமானவர்களாகிவிட்டனர் எனவும் இன்று அரசாங்கம் மக்களிடம் பணம் பறித்து - கப்பம் பெறும் நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவரின் எண்ணக்கருவில் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'சசுநட அருண' வேலைத்திட்டத்தின் கீழ் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பேரகம எல விசுத்தாராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட அறநெறிப் பாடசாலை கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.
இந் நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இன்று நுகர்வுப் பொருட்களின் விலைகள் தன்னிச்சையாக அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும், இவை எதற்கும் அரசாங்கம் பொறுப்பல்ல என்பது போல செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் ஊழல் நிறைந்த அரசாங்கம். இந்த சர்வாதிகார ஆட்சியில் ஒட்டுமொத்த விவசாயிகளும் அநாதையாகியுள்ளனர். மக்களை அழிக்கவே இந்த அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.