போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய தம்பதி! வெளிவந்த பின்னணி
Kalutara
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
05 போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் தம்பதியொன்று களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது, வடக்கு களுத்துறையின் நாகஸ் சந்தி பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் களுத்துறை - கிதுலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கை
இதற்கு முன்னதாகவும் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வைத்திருந்ததற்காக அவர்கள் அச்சு இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அது தொடர்பான வழக்குகள் தற்போது களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தம்பதியினரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி