கொரோனா தொற்றாளர்களின் சடலங்கள் வீடுகளில் இரகசிய அடக்கம்?
covid
sri lanka
death
By Vanan
கொரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளிலேயே சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பவர்களை இரகசியமாக அடக்கம் செய்கின்ற சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ள நிலையில், பொலிஸார் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஷ்டப் பிரதேசங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளிலேயே சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பவர்களை இரகசியமாக அடக்கம் செய்கின்ற சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக திருகோணமலை பிரதேச சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் டி.ஜி.எம். கொஸ்தா அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதுபோன்ற தகவல்கள் கிடைத்திருக்கின்ற நிலையில் அதன் உண்மைத் தன்மை பற்றி விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்