இராஜாங்க அமைச்சருக்கு தொற்றியது கொவிட்
covid
parliament
Lasantha Alagiyawanna
By Sumithiran
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாவது நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளது.
இதன்படி சபாநாயகர் மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றையதினம் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த சில நாட்களாக இராஜாங்க அமைச்சருடன் நெருங்கிப் பழகியவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, நாட்டில் இதுவரையில் 40க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்