யாழ் : கொழும்பு தொடருந்து சேவை இன்று முதல் நிறுத்தம்
வடக்கு தொடருந்து மார்க்கத்தின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி இன்று (07) முதல் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான தொடருந்து மார்க்கம் திருத்தப் பணிகள் காரணமாக மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்..
இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பந்துல குணவர்தன தெரிவிப்பு
அதன்படி இன்று முதல் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை வரை மட்டுமே தொடருந்து சேவைகள் இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு தொடருந்து மார்க்கத்திற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மார்க்கத்தையும் இவ்வருடம் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய தொடருந்து சேவையையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பந்துல குணவர்தன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |