இலங்கை கிரிக்கெட் ஒளிபரப்பில் மறைமுக சூதாட்ட மறைமுக விளம்பரங்கள்
இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்டத் தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தயம் தொடர்பான மாற்றுத் தொழில்களின் விளம்பரங்கள் தொடர்ந்து காட்டப்படுவது குறித்து சிரேஷ்ட ஆய்வாளர் மருத்துவர் சஞ்சனா ஹட்டோட்டுவா கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் சிறப்பம்சங்கள் அடங்கிய 5 காணொளிகளில், ஒரு சூதாட்ட பந்தயம் கட்டும் நிறுவனத்தின் சின்னம் சுமார் 14 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியில் இடம்பெற்ற போட்டிகளையும் சேர்த்து 10 காணொளிகளில் சுமார் 25 நிமிடங்கள் இந்த விளம்பரம் காட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரங்கள் காட்சிப்படுத்தல்
இந்த நிலையில் விக்கெட்டுக்குப் பின்னால் உள்ள விளம்பரப் பாய், எல்லை விளம்பரங்கள் மற்றும் பார்வைத் திரைகள் மூலமாக, வெளிநாட்டுச் சூதாட்டப் பின்னணி கொண்ட முத்திரைகள் போட்டியில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த நிறுவனத்துக்கு சொந்தமான இணைய தளங்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்துள்ள நிலையிலும், 2025ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையிலும் இத்தகைய விளம்பரங்கள் இடம்பெறுவது சட்டம் நடைமுறையாக்கத்துக்கு பலவீனத்தைக் காட்டுவதாக ஆய்வாளர் கூறியுள்ளார்.
இதனிடையே "இலங்கையின் எல்லைக்குள் நடைபெறும் போட்டிகளில் சூதாட்ட விளம்பரங்களை அனுமதிப்பதில்லை" என சிறிலங்கா கிரிக்கெட் முன்னர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening