பிள்ளையானை முகநூல்களில் விமர்சிப்பவர்களை அழைக்கும் 4 ஆம் மாடி: சாணக்கியன் குற்றச்சாட்டு

CID - Sri Lanka Police Ranil Wickremesinghe Shanakiyan Rasamanickam Sivanesathurai Santhirakanthan Crime Branch Criminal Investigation Department
By Sathangani Sep 25, 2023 04:47 AM GMT
Report

இராஜாங்க அமைச்சர் சி சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பாக இரண்டு தினங்களுக்கு முன்னதாக ''ஒரு கொலைகாரன்'' என முகநூலில் பதிவுகளையிட்ட சிலர் நான்காம் மாடிக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கின் அவமானம் பிள்ளையான் : இரா.சாணக்கியன்

கிழக்கின் அவமானம் பிள்ளையான் : இரா.சாணக்கியன்


சனல் 4இன் காணொளி 

"மக்களை அடக்குவதற்கும் மக்களை கட்டுப்படுத்துவதற்குமாகவே அரசாங்கம் தற்போது புதிய சட்டமூலங்களை கொண்டு வர முயல்கின்றது.

பிள்ளையானை முகநூல்களில் விமர்சிப்பவர்களை அழைக்கும் 4 ஆம் மாடி: சாணக்கியன் குற்றச்சாட்டு | Criticize Pillaiyan On Fb Are Invited To 4Th Floor

தற்போது கொண்டு வர உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலமாக நாட்டின் ஜனநாயகத்தையும் கருத்து சுதந்திரத்தையும் இல்லாதொழிக்கும் செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன்.

சனல் 4இன் காணொளியில் இலங்கையில் இடம்பெற்ற கொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி. சந்திரகாந்தனுக்கு தொடர்பு இருக்கின்றது என்பதை வெளியிட்டுள்ளது.

300 மில்லியன் ருபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் கென்யா பிரஜை கைது

300 மில்லியன் ருபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் கென்யா பிரஜை கைது


புதிய சட்டமூலங்கள்

இந்நிலையில், சனல் 4இன் கருத்தை தங்களது முகநூல்களில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு 4ஆம் மாடியில்  விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

பிள்ளையானை முகநூல்களில் விமர்சிப்பவர்களை அழைக்கும் 4 ஆம் மாடி: சாணக்கியன் குற்றச்சாட்டு | Criticize Pillaiyan On Fb Are Invited To 4Th Floor

சனல் 4இல் வெளிவந்த காணொளியை போட்டவர்களுக்கே நான்காம் மாடி விசாரணை என்றால் எதிர்வரும் காலங்களில் இலங்கையில் கொண்டு வரப்போகின்ற புதிய சட்டமூலங்கள் மக்களது பிரச்சினைகளை ஆதங்கங்களை வெளிப்படுத்த முயல்கின்றபோது அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

தற்போது ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமானது இந்த சட்டங்களை வைத்து அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையோ போராடுபவர்களையோ அடக்க முயல்கின்றார்கள் என்றுதான் நான் நினைக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: சாணக்கியனை உருவக்கேலி செய்த பிள்ளையான்! சூடுபிடித்த வாக்குவாதம் (காணொளி)

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: சாணக்கியனை உருவக்கேலி செய்த பிள்ளையான்! சூடுபிடித்த வாக்குவாதம் (காணொளி)


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026