இலங்கையை விட்டு விலகிச் செல்லும் தாழமுக்கம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை நீக்கம்
நாட்டில் நிலவிய தாழமுக்கமானது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 300 கிலோமீற்றர் வடகிழக்கே, அண்ணளவாக 12.3°N அட்சரேகை மற்றும் 80.6°E தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இலங்கையிலிருந்து மேலும் விலகி, வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.
மின்னல் தாக்கங்கள்
அத்துடன் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (01) மழை பெய்யக்கூடும்.

மேலும், ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |