சலேவுக்கு எதிராக கர்தினால் தாக்கல் செய்த மனு! திகதியை அறிவித்தது நீதிமன்றம்
தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனுவில் தலையிட்டு சாட்சியங்களைச் சமர்ப்பிப்பதற்காக, கர்தினால் மல்கம் ரஞ்சித் தாக்கல் செய்துள்ள இடைபுகு மனுக்களைப் பரிசீலிப்பதற்காக மேல்முறையீட்டு நீதிமன்றம் திகதிகளை நிர்ணயித்துள்ளது.
இதன்படி, குறித்த மனுக்களை விசாரிக்க ஓகஸ்ட் 04 மற்றும் 06 ஆம் திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த இடைபுகு மனுக்களை கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் பெங்கமுவ நாலக்க தேரர் உள்ளிட்ட எட்டு தரப்பினர் தாக்கல் செய்துள்ளனர்.
சாட்சியச் சமர்ப்பிப்பு
இந்த மனு இன்று (17) மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி ரோகந்த அபேசூரியவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது அவர், மனுதாரர் தரப்புக்காக முன்னிலையாகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தனவின் சாட்சியச் சமர்ப்பிப்பு முடிந்த பின்னர், இந்தத் தலையீடுகள் தொடர்பான ஒரு முடிவு பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து தரப்பினரின் ஒப்புதலுடன், தொடர்புடைய இடைபுகு மனுக்களின் விசாரணைகள் ஓகஸ்ட் 4 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடத்தப்படும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |