இன்று மீண்டும் சிஐடியில் முன்னிலையான தயாசிறி ஜயசேகர
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) இன்று (06) மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
பேசுபொருளாகியுள்ள 323 கொள்கலன்களை விடுவித்தது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரையும், கொள்கலன்களை விடுவித்த குழுவையும்தான் அழைக்க வேண்டும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
வாக்குமூலம் வழங்கினார்
எனினும், இப்பிரச்சினையை எழுப்பியவர்களுக்கு மட்டுமே அழைப்பாணை அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசாங்கத்திற்கு ஆதரவான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கும் அரசாங்கத் தரப்பினரைப் பாதுகாப்பதற்கும் இது பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை தயாசிறி ஜயசேகர, குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 4ஆம் திகதியும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
