பட்டம் விடும் போது கூரை உடைந்து விழுந்ததில் சிறுவன் உட்பட மூவர் மரணம்!
sri lanka
death
people
galle
By Shalini
காலி − மக்குலுவ பகுதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றின் மேல் கூரையில் ஏறி பட்டம் விட முயற்சித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வீட்டின் கூரை உடைந்து வீழ்ந்ததில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது 46 வயதுடைய வீட்டு உரிமையாளர் அவரது மகனான 6 வயது சிறுவன் மற்றும் அயல்வீட்டுக்காரரான 44 வயதுடையவரே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.