ஒட்டுசுட்டானில் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் நீரில் மூழ்கி பலி
ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் நமசிவாயம் டிலக்சன் (வயது - 25) நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின், காதலியார் சம்மணங்குளம் கிராம அலுவலர் பிரிவின், ஏம்பகுளம் குளத்தில் நில அளவை திணைக்களத்தினர் நில அளவை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அளவை பணியில் வித்தியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் நமசிவாயம் டிலக்சன் உள்ளிட்ட நான்கு பேர் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.
நில அளவை பணிக்காக குளத்தில் இறங்கிய போது குறித்த இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் சேற்றில் புதையுண்டு நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
கிராம மக்கள் மற்றும் இராணுவத்தினரால் மீட்கபட்ட சடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
