திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்…

Trincomalee Law and Order
By Theepachelvan Jan 02, 2026 05:57 AM GMT
Report

திருகோணமலை கடற்கரையில் 2006-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 20-ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த துயர சம்பவம் ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத வடுவாகவும், சர்வதேச அளவில் நீதி மறுக்கப்பட்டதற்கான முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறது.

பின்னணி மற்றும் சம்பவம்

2006-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் திகதி மாலை, திருகோணமலை டொக்யார்ட் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு அருகிலுள்ள கடற்கரையில் ஏழு மாணவர்கள் ஒன்றுகூடி உரையாடிக்கொண்டிருந்தனர்.

அந்தச் சமயம் அங்கு வந்த ஆயுதம் தாங்கிய சிறப்பு அதிரடிப் படையினர் (STF), அந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

முதலில் அவர்கள் மீது கைக்குண்டு எறியப்பட்டது, பின்னர் அவர்கள் மண்டியிட வைக்கப்பட்டு மிக அருகாமையில் வைத்து தலையிலும் நெஞ்சிலும் சுடப்பட்டனர்.

இந்தத் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்கள்:

மனோகரன் ரஜீகர்

யோகராஜா ஹேமச்சந்திரா

லோகிதராஜா ரோகன்

தங்கத்துரை சிவானந்தா

சண்முகராஜா கஜேந்திரன்

இடியுடன் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இடியுடன் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தச் சம்பவத்தில் யோகராஜா பூங்குழலோன் மற்றும் பரராஜசிங்கம் கோகுல்ராஜ் ஆகிய இரு மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். 

சம்பவம் நடந்த உடனேயே, இவர்கள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் வீசிய குண்டுகள் தவறுதலாக வெடித்ததாலேயே உயிரிழந்தனர் என்றும் அரசால் முதலில் கூறப்பட்டது.

ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இப்படுகொலையை அரசும் படையும் திட்டமிட்டுச்செய்தது என்பது வெளிப்படையான உண்மை.

மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச , ஹொட்டகதெனிய என்று இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பட்டியல் பெரிது, இந்தப் படுகொலை வழக்கில் கடற்படையினர் சிலர் கைதாகி போதிய சாட்சியம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கையில் தமிழ் மக்களின் படுகொலைக்கு என்றுதான் நீதி கிடைத்திருக்கிறது? திருமலை ஐந்து மாணவர் படுகொலை விடயத்திலும் அதுதான் நிகழந்தேறியது.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

சுகரிதராஜன் படுகொலை

ஈழத்தின் கிழக்கில் இனப்படுகொலைப் போர் சூழ்ந்த வருடம் அது. 2006ஆம் ஆண்டு சனவரி 02ஆம் நாளன்று திருகோணமலையை மாத்திரமின்றி ஒட்டுமொத்த இலங்கைத் தீவையும் அசைத்தது திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை.

சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயம் சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருகோணமலையில் இருந்து ஐந்து மாணவர் படுகொலை குறித்த செய்திகளை திருகோணமலை ஊடகவியலாளர் சுகிர்தராஜன் வெளிக்கொணர்ந்தார்.

இதற்குச் சில நாட்களின் பின்னர் அதாவது 2006 சனவரி 24 இல் சுகிர்தராஜன் திருகோணமலையில் ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஐந்து மாணவர்கள் படுகொலை தொடர்பிலான ஆதாரங்களை இவர் வெளியிட்டமையால்தான் படுகொலை செய்யப்பட்டார் என்று அப்போதே சந்தேகிக்கப்பட்டது. மிக முக்கியமாக ஐந்த மாணவர் படுகொலை குறித்த நிழல்படங்களை இவரே பதிவு செய்தார்.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

போராடிய மனோகரன்

இந்தக் கொலைகளுக்கு நீதி கோரி கொல்லப்பட்ட மாணவர் ரஜீகரின் தந்தை வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் அவர்கள் சர்வதேச அளவில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தார்.

ஆனால், 2019-ஆம் ஆண்டு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, குற்றம் சாட்டப்பட்ட 13 பாதுகாப்புப் படை வீரர்களும் விடுவிக்கப்பட்டனர்.

ஏறத்தாழ 20 ஆண்டுகள் நீதிக்காகப் போராடிய மருத்துவர் மனோகரன் அவர்கள், கடந்த செப்டம்பர் 21, 2025 அன்று தனது 84-வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு "திருமலை 5" (Trinco 5) படுகொலை வழக்கு எனப்படுகிறது. இந்த வழக்கு இலங்கையில் நிலவும் அடக்குமுறையை உலகுக்கு உணர்த்தும் ஒரு குறியீடாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 2-ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் இந்த மாணவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இன்றைய 20-ஆம் ஆண்டு நினைவுநாளில், உயிரிழந்த அந்த இளம் மலர்களுக்கு அகவணக்கத்தைச் செலுத்துவதோடு, காலம் கடந்தாவது அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி