1000 ஐ கடந்தது இலங்கையின் கொவிட் பலி!!
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதன்படி, 1015 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று (18) இதுவரையில் 2,478 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில்147,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்