சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் பாரிய வெடிப்பு - 90 பேர் பலி
வட சீனாவின் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பு நேற்று (22) அந்நாட்டு நேரப்படி இரவு 7.29 இற்கு ஷான்சி மாகாணத்தில், டோங்ஜோ குழுமத்திற்கு சொந்தமான லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் 247 ஊழியர்கள் அங்கு பணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கைது
அவ்விடத்தில் மீட்புப் பணிகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலக்கரிச் சுரங்கத்தை நடத்தி வந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வாயு வெடிப்புக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் சுரங்கத்தில் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த, மணமற்ற வாயுவான கார்பன் மோனாக்சைடின் அளவு "வரம்புகளை மீறியிருந்தது" என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதிலும் முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |