ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Manusha Nanayakkara Sri Lanka Jordan Foreign Employment Bureau
By Sathangani Jan 12, 2024 10:15 AM GMT
Report

ஜோர்தானில் வேலையிழந்த ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களான இலங்கையர்கள் மீது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கவனம் செலுத்தியுள்ளார்.

இதன்படி, தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகமும் அதன் தொழிலாளர் நலப் பிரிவும் சம்பந்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அநீதி தொடர்பாக ஜோர்தானில் உள்ள தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

சிறிலங்காவின் 9 ஆவது அதிபராக அநுர குமார திஸாநாயக்க : லால் காந்த விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

சிறிலங்காவின் 9 ஆவது அதிபராக அநுர குமார திஸாநாயக்க : லால் காந்த விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை

இந்த தொழிலாளர்களை இலங்கைக்கு அனுப்ப விமான டிக்கெட்டுகளை வழங்க முடியும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இலங்கைத் தூதரகமும் அதன் தொழிலாளர் நலப் பிரிவும் அதில் திருப்தி அடையவில்லை.

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Decision Of Regarding Sri Lankans Stuck In Jordan

பின்னர் இந்தியா மற்றும் பங்களாதேஷைப்  பிரதிநிதித்துவப்படுத்தும் ஜோர்தானில் உள்ள தூதுவர்களுடன் சேர்ந்து, அந்த நாட்டில் உள்ள தொழிலாளர் அமைச்சு அதிகாரிகளை சமூக காப்பீட்டு நிதியத்தின் மூலம் இழப்பீடு வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் சமூக பாதுகாப்பு இழப்பீடு ஆகியவற்றின் நிலுவைத் தொகையைப் பெறுவதற்கு ஜோர்தானிய சட்ட ஆலோசனை நிறுவனத்திற்கு உதவுமாறு பணியகத்தின் தலைவர், ஏ.எம். ஹில்மி , தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அத்துடன், தற்போது ஜோர்தானில் செல்லுபடியான வீசா இன்றி தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாமல் நாட்டுக்கு அழைத்து வருமாறும், தங்கியிருக்க விரும்பும் 62 இலங்கையர்களுக்கு புதிய பணியிடங்களை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

220 இலங்கைத் தொழிலாளர்கள் 

தற்போது, ​​சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தூதரகத்தின் கோரிக்கைகளுக்கு பதில் கிடைத்ததையடுத்து, இம்மாதத்திற்குள் இந்த தொழிலாளர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Decision Of Regarding Sri Lankans Stuck In Jordan

ஜோர்தானில் உள்ள ஒரு நிறுவனத்தில் 153 இலங்கைத் தொழிலாளர்களும் மற்றைய ஆடைத் தொழிற்சாலையில் 67 தொழிலாளர்களும் பணிபுரிந்தனர்.

இதேவேளை, குறித்த நிறுவனமொன்றில் பணியாற்றிய இலங்கைத் தொழிலாளர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், உணவு, தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை தட்டுப்பாடு இன்றி பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

நெருக்கடிக்குள்ளாகியுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்: பயணங்கள் தாமதமானதால் குழப்பம்

நெருக்கடிக்குள்ளாகியுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்: பயணங்கள் தாமதமானதால் குழப்பம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நிதியுதவி 

இந்த இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் உள்ள இலங்கைப் பணியாளர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான நிதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அனுப்பி வைத்துள்ளது.

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Decision Of Regarding Sri Lankans Stuck In Jordan

தொழிலாளர் நலத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை அவதானித்து வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடுகிறது.

இவ் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மூன்று சட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடப்பட்டு, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னர், ஊழியர்களின் சம்மதத்துடன் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கைப் பணியாளர்கள் நாடு திரும்பவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தொலைபேசி அழைப்பில் நூதன திருட்டு! கையும் களவுமாக சிக்கிய இருவர்

யாழில் தொலைபேசி அழைப்பில் நூதன திருட்டு! கையும் களவுமாக சிக்கிய இருவர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026