பதவி நீக்கப்படும் பாதுகாப்பு செயலாளர் - எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு
முன்னால் சிறிலங்கா இராணுவ ஜெனரல் கமல் குணரத்னவை அவரது பதவியில் இருந்து நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் நீடித்துவரும் கமல் குணரத்ன போராட்டகாரர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தற்போது அவர் மீது முன்வெக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நடைபெற்ற காலத்தில் போராட்டகாரர்கள் அதிபர் மாளிகை, அலரி மாளிகை, அதிபர் செயலகம் உட்பட அரசின் உயர்மட்ட இடங்களுக்குள் புகுந்திருந்தனர்.
அதிபர் ஆலோசகரின் யோசனை

இதன் காரணமாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு தரப்பினர் ஊடாக இதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ஓய்வுபெற்ற இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ஆலோசகரான ருவான் விஜேவர்தனவே குறித்த யோசனையை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.