இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சமூக ஊடகத் தடை! வலியுறுத்தும் முக்கிய புள்ளி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அத்தபத்து, தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு முழுமையான சமூக ஊடகத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றில் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை கவனச்சிதறல்கள் வீரர்களின் கவனம் மற்றும் தொழில்முறையைப் பாதிக்கின்றன என அவர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
வீரர்களின் கவனம் மற்றும் அர்ப்பணிப்பு
நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மற்றும் செயல்திறனில் தங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்றும், சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது வீரர்களின் கவனம் மற்றும் அர்ப்பணிப்பை மீண்டும் பெற உதவும் என்று அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.

"வீரர்கள் சமூக ஊடகங்கள் தேவை என்று உணர்ந்தால், அவர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும்.
நீங்கள் உங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது, உங்கள் கவனம் உங்கள் செயல்திறன் மற்றும் தயார்படுத்தலில் மட்டுமே இருக்க வேண்டும்" எனவும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து விதமாகவும் இலங்கை அணியை வழிநடத்திய மார்வன் அத்தபத்து, நாட்டின் மிகவும் ஒழுக்கமான வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 22 மணி நேரம் முன்