கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தின் அவலநிலை : பாராமுகம் காட்டும் அரச அதிகாரிகள்
கிளிநொச்சி(kilinochchi) நகரில் அமைந்துள்ள பொது பேருந்து தரிப்பிடத்தின் வளாகத்தை சூழ்ந்துள்ள இடங்கள் மழை நீர் தேங்கி மாசுபடிந்த நிலையில் காணப்படுவதோடு ஆங்காங்கே பிளாஸ்டிக் போத்தல்கள் காணப்படுகின்றமையால் டெங்கு (dengue)பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் உள்ள மலசல கூடத்தின் கழிவுநீர், பயணிகள் பாவனையில் உள்ள இடங்களில் வெளியேறுதல் மற்றும் தரிப்பிட வளாகம் மிகவும் அசுத்தமாக காணப்படுவது தொடர்பாக ஊடகங்கள் மூலம் பலமுறை தெரியப்படுத்தப்பட்டபோதும் அதிகாரிகள் மிகவும் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வட மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள இடம்
கிளிநொச்சி பேருந்து நிலையமானது வட மாகாணத்தின் மத்தியில் காணப்படுகிறது.
தென்பகுதி மற்றும் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் இவ் பேருந்து நிலையமே மத்தியில் காணப்படுவதனால் பேருந்து நிலையத்திற்கு நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
பயணிகள் விசனம்
எனவே ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்லும் இடம் அசுத்தமாக காணப்படுகின்றமை தொடர்பாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |