உயர்தர மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு
நாட்டில் நிலவிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அனர்த்த நிலைமைகள் காரணமாக உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம்
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்களால் நாட்டின் பல பாகங்களிலும் பரீட்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இக்காலப்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகளுக்குச் சமூகமளிக்க முடியாத மாணவர்களுக்காகவே இந்த புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |