சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து தென்னகோன்
புதிய இணைப்பு
காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் சற்று முன்னர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
மாத்தறை நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச அண்மையில் பிறப்பித்த உத்தரவிற்கமைய தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவர் மன்றில் முன்னிலையாகியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) உள்ளிட்ட இருவர் இன்றைய தினம் (25) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதான நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச அண்மையில் (21.04.2025) பிறப்பித்த உத்தரவிற்கமைய அவர்கள் மன்றில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
அன்றையதினம் நீதிமன்ற உத்தரவுகளை மீறி நீதிமன்ற வளாகத்திற்குள் மகிழுந்தை ஓட்டிச் சென்றதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் முறைப்பாடளித்துள்ளது.
அதற்கமையவே, இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தேசபந்து உள்ளிட்ட இரண்டு பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தது.
இதேவேளை 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கின் 9ஆவது சந்தேக நபரான நெவில் சில்வா நேற்று (24) நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
