இராஜாங்க அமைச்சர் டயனாவின் எம்.பி பதவி தொடர்பில் வெளியாகவுள்ள தீர்ப்பு!
பிரித்தானிய பிரஜை என்ற அடிப்படையில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான மனுவொன்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூன் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கவுள்ளது.
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தும் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பு
இதன்போது 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடுமாறு தெரிவித்து சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை எனவும், இதனால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
