கோட்டாபயவுக்கு அழுத்தம் கொடுத்தாரா மோடி...-வெளிவந்த தகவல்
முற்றாக நிராகரிக்கும் கோட்டாபய
இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கோ அல்லது ஒரு நபருக்கோ வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் நேற்றையதினம் கோப் குழுவில் தெரிவித்த கருத்தையே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. திரு பெர்டினாண்டோ கோப் குழுவிடம் தெரிவித்தவை வருமாறு,
Re a statement made by the #lka CEB Chairman at a COPE committee hearing regarding the award of a Wind Power Project in Mannar, I categorically deny authorisation to award this project to any specific person or entity. I trust responsible communication in this regard will follow.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) June 11, 2022
அழுத்தம் கொடுத்த மோடி
"உண்மையில்,அரச தலைவர் ஒரு கலந்துரையாடலுக்கு பின்னர் என்னை அழைத்தார், நவம்பர் 24 ஆம் திகதி போல் நான் நினைக்கிறேன், ' 500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை அதானியிடம் கொடுங்கள். இந்தியப் பிரதமர் மோடி இதை வழங்குமாறு என்னை வற்புறுத்துகிறார்' என்றார் என மின்சார சபைத் தலைவர் தெரிவித்தார்.