பெருமளவு எரிபொருளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது
எரிபொருளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது
முல்லைத்தீவு - முள்ளியவளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் அதிகளவான டீசல் மற்றும் மண்ணெண்ணையினை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலக்கு அமைய முள்ளியவளை 4ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சோதனை செய்தவேளை, 4 பரல்களில் பதுக்கிவைத்திருந்த 830 லீற்றர் டீசல் மற்றும் 30 லீற்றர் மண்ணெண்ணைய் என்பன மீட்கப்பட்டுள்ளன.
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் கைது
இந்த மீட்பு நடவடிக்கை நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு முள்ளியவளை காவல் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 21.07.2022 ஆம் திகதி குறித்த வழக்கிணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முள்ளியவளை காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)