முதலாம் திகதி முதல் புதிய மாற்றம் - வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
நாட்டில் டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இதனை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை, இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் இலங்கை காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
வாகன காப்புறுதி முறை
அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் இலகுவான, காகிதமற்ற மற்றும் வினைத்திறனான அனுபவத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த முறை கொண்டுவரப்பட உள்ளது.

வாகன காப்புறுதி முறையை நவீனமயமாக்கல், தேசிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் பொதுப் பாதுகாப்பை பலப்படுத்துதல் ஆகியவற்றிற்கான முக்கிய ஒரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
மேலும், பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துவதன் மூலம், இது நாடு தழுவிய ரீதியில் சுற்றாடல் நிலைத்தன்மைக்கும் பங்களிப்பு செய்யும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்