மன்னாரில் காற்றாலை குறித்த முக்கிய கலந்துரையாடல்: இடையில் வெளியேறிய அமைச்சர்

Mannar Sri Lanka Kumara Jayakody
By Shalini Balachandran Sep 05, 2025 08:51 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மன்னார் (Mannar) காற்றாலை தொடர்பில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலிருந்து எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி (Kumara Jayakody) இடையில் வெளியேறியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (05) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விபத்திற்கு முன் சாரதி கூறிய இறுதி வார்த்தை: தப்பியவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

விபத்திற்கு முன் சாரதி கூறிய இறுதி வார்த்தை: தப்பியவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

காற்றாலை கோபுரங்கள்

இதனடிப்படையில், இன்று (05) காலை பத்து மணி அளவில் முதலாவது கலந்துரையாடல் மன்னார் சாந்திபுரம் ,சௌத்பார் கிராமங்களை உள்ளடக்கி சாந்திபுரம் மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு, எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் இன்று (05) மன்னாரிற்கு வருகை தந்துள்ளனர்.

மன்னாரில் காற்றாலை குறித்த முக்கிய கலந்துரையாடல்: இடையில் வெளியேறிய அமைச்சர் | Discussion Regarding The Mannar Wind Farm Project

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சௌத்பார் பகுதியில் இரண்டு காற்றாலை கோபுரங்களும், தாழ்வு பாட்டில் இரண்டு காற்றாலை கோபுரங்களும் மற்றும் தோட்டவெளியில் இரண்டு காற்றாலை கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது.

குறித்த ஐந்து காற்றாலை கோபுரங்களும் 20 மெகா வாட் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.

ஜே.வி.பியின் காணியில் பிரபல கட்சியொன்றின் அலுவலகம்! அரசாங்கத்திற்கு பகிரங்க சவால்

ஜே.வி.பியின் காணியில் பிரபல கட்சியொன்றின் அலுவலகம்! அரசாங்கத்திற்கு பகிரங்க சவால்

எட்டு காற்றாலை

மேலும் ஓலைத்தொடுவாய் பகுதியில் ஆறு காற்றாலை மின் கோபுரங்களும் மற்றும் பேசாலை மேற்கில் இரண்டு காற்றாலை மின் கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது.

குறித்த எட்டு காற்றாலை மின் கோபுரங்களும் 50 மெகா வாட் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.

மன்னாரில் காற்றாலை குறித்த முக்கிய கலந்துரையாடல்: இடையில் வெளியேறிய அமைச்சர் | Discussion Regarding The Mannar Wind Farm Project

இது தொடர்பில் மக்களின் கருத்தை கேட்டறிய அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் மன்னாரிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்போது அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மக்களுடன் கலந்துரையாடிய போதும் மக்கள் தமது கிராமங்களுக்குள் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தேவை இல்லை எனவும் குறித்த காற்றாலை மின் கோபுரங்களை அமைக்க தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய இந்திய பிரஜை

பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய இந்திய பிரஜை

காற்றாலை கோபுரங்கள்

அத்தோடு, மன்னார் தீவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாலை மின் கோபுரங்களால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மற்றும் கடற்றொழிலாளர்கள் தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது கிராம மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் காற்றாலை கோபுரங்களை மன்னார் தீவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைத்ததோடு, எமது பகுதிக்குள் காற்றாலை அமைக்க ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் என உறுதிபட தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் காற்றாலை குறித்த முக்கிய கலந்துரையாடல்: இடையில் வெளியேறிய அமைச்சர் | Discussion Regarding The Mannar Wind Farm Project

இருப்பினும், அமைச்சர் தலைமையிலான குழுவினர் மக்களுடன் கலந்துரையாடி தமக்கு சாதகமான பதிலை எதிர்பார்க்க முயற்சி செய்த போதும் கலந்து கொண்ட அனைத்து மக்களும் தமது பகுதிக்குள் காற்றாலை வேண்டாம் எனவும் அமைக்க அனுமதி வழங்க மாட்டோம் எனவும் ஒருமித்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அமைச்சர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்து வெளியேறியதுடன் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கருத்து கேட்ட போதும் எவ்வித பதிலும் வழங்காது அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காவல்துறையை கூப்பிட்டு சபையை நடத்துவேன் : மிரட்டும் யாழ் மாநகர முதல்வர்

காவல்துறையை கூப்பிட்டு சபையை நடத்துவேன் : மிரட்டும் யாழ் மாநகர முதல்வர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023